சென்னையில் திடீர் பதட்டம்.! 50-க்கும் மேற்பட்ட விசிகவினர் அதிரடி கைது!! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் நிலையம் எதிரில் நேற்று இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. பதற்றத்தைத் தணிக்கும் விதமாக, இரவோடு இரவாக சேதப்படுத்தப்பட்ட சிலைக்குப் பதிலாக அரசு சார்பில் மற்றொரு சிலை மீண்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சென்னையில் இன்று திடீரென போராட்டத்தில் இறங்கினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே போராட்டத்திற்கு அனுமதி பெற்ற அவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு காரணமாக, அங்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck members arrest in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->