நடிகை ஜோதிகா, ஞானவேல், சூர்யா மீது சாதி சண்டையை தூண்டுதல் வழக்கு.! கூண்டோடு சிக்கும் கும்பல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம், தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக, சாதிய வன்மத்துடன், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில், இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதற்கு, அந்த சமூக மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ், வடநாட்டு சேட்டு ஒருவர் ஹிந்தி மொழியில் பேசும் போதே பட்டென்று கன்னத்தில் அறைந்து தமிழில் பேசவேண்டும் என்று சொல்வர். இது வட இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், இந்த படத்தில் பழங்குடியின மக்களான ஒட்டர் சமூக மக்களை அசிங்கப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக, ஒட்டர் சமூக மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இதனையடுத்து அந்த படத்தில் சாதிய வன்மத்துடன் அமைக்கப்பட்ட அந்த காட்சியை நீக்கி, செய்த தவறை ஒப்புக்கொண்டனர். ஆனால், மன்னிப்பு கேட்காமல் படக்குழு காலம் தாழ்த்தி வந்த நிலையில், படத்தின் இயக்குனர் மட்டும் வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தாக்கல் செய்துள்ள அந்த வழக்கில், அவதூறு பரப்புதல், இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில், நடிகை ஜோதிகா, கனகவேல், சூர்யா, தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தை வெளியிட்ட ஓடிடி தளம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VANNIYAR SANGAM Appeal To cdm court for jai bhim movie issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->