#BigBreaking : வன்னியர் உள்ஒதுக்கீடு அரசாணைக்கு தடை இல்லை.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அரசுடன் நடத்த பேச்சுவார்த்தையின் முடிவில் வன்னியர்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.

இந்த அரசாணைகள் அனைத்தும் சட்டவல்லுனர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து வழங்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இதனை அமல்படுத்துவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. 

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையும் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

இதனையடுத்து, நேற்று முன்தினம் மாலை தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது. அதில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக பல்வேறு தரப்புகளில் இருந்தும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், இன்று காலை இது சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிட்டு உள்ளதன் படி, இந்த கல்வி ஆண்டு முதல் இந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்த படுமா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி,  இதற்கான பதிலை இன்று மதியம் 2.10-குள் சொல்ல வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், "பல்வேறு தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது., ஏன் இந்த வன்னியர் சிறப்பு ஒதுக்கீடுக்கு தடை விதிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. மேலும் இது சிறப்பு இடஒதுக்கீடு கடந்த பிப்ரவரி மாதத்திலேயே சட்டமாக இயற்றப்பட்டது என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து நீதிபதிகள், இட ஒதுக்கீடு அரசாணைக்கு தடை இல்லை என்று தெரிவித்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanniyar Reservation go case chennai hc order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->