வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி மாற்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளின் தேதிகளில் மற்றம் செய்யப்பட்டு வருகிறது.

வரும் 16 ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் நடப்பட்ட இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் தேதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16-ஆம் தேதிக்கு பதிலாக, 17ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் வருகின்ற 13ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், வன்னியன்விடுதி கிராமத்தில் வருகின்ற 16ஆம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை, மறுநாள் ஜனவரி 17ஆம் தேதி நடத்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanniyan viduthi jallikattu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->