ஸ்டாலினை சந்தித்து திரும்பிய வைரமுத்து.! மோடிக்கு முக்கிய கோரிக்கை.!
vairamuthu meets stalin in anna arivalayam
பாடலாசிரியர் வைரமுத்து தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி இனியும் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்திற்கு சென்று பாடலாசிரியர் வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய இருக்கும் கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்தை நிதியாக ஸ்டாலினிடம் அவர் அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, மு.க.ஸ்டாலின் கலைஞர் பிறந்த மண்ணிலேயே அவருக்கு அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றார். இதுகுறித்து சில விஷயங்களை ஆலோசனை செய்தோம்.
மேலும், இதுகுறித்து சில கருத்துகளை அவரிடம் கூறினேன். தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டியது பிரதமர் மோடிக்கு மிகவும் நன்றாக இருந்தது. இனியும் பிரதமர் இதனை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
vairamuthu meets stalin in anna arivalayam