தமிழக அரசிற்கு சல்யூட் போட்ட வைகோ.! வெளியிட்ட அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசு அறிவித்துள்ள மாவட்டப் பிரிவினையானது சங்கரன்கோவில் தொகுதியை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கின்ற வகையில் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றார்.  

தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தை பிரித்து புதிய வருவாய் மாவட்டம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.

edappadi, seithipunal

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் பகுதிகளில் இருந்து தென்காசிக்கு நேரடியான போக்குவரத்துத் தொடர்புகள் இல்லை.

இவை, தென்காசியில் இருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. திருநெல்வேலிதான் அருகில் உள்ளது என்றும் கல்வி, மருத்துவத் தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் அன்றாடம் திருநெல்வேலிக்குச் சென்று வருகின்றார்கள். எனவே, சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தை சேர்ந்த நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றார்கள்." என கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko says about thenkasi district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->