#BREAKING: 8 தொகுதி., தனிச்சின்னம்., சற்றுமுன் வைகோ பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஆகிய நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை மதிமுக-வுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. 

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக சார்பில் மல்லை சத்யா உள்ளிட்ட 3 பேர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதனையடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "திமுக - மதிமுக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடரும். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. எங்களின் கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் " என்று மல்லை சத்யா தெரிவித்தார். 

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைவர் வைகோ தெரிவிக்கையில், "திமுக உடன் மதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. நேற்று முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது . அடுத்து கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பது, அவர்களிடம் தகவல் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும்.

எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பது குறித்து தொகுதிகள் முடிவான பிறகு தான் முடிவாகும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும். நாங்கள் ல்ல முடிவை எதிர் பார்க்கிறோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAIKO PRESS MEET dmk alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->