ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பு.. வைகோ இரங்கல்.! - Seithipunal
Seithipunal


கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜெ.அன்பழகன். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

2001, 2011, 2016, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன். மறைந்த ஜெ.அன்பழகனுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது ஜெ.அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெ.அன்பழகனின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பு என வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெ.அன்பழகனின் மறைவுச் செய்தி பேரிடியாக தாக்குகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர், அன்பழகன் மறைந்தார் என்பதை தாங்க முடியவில்லை என இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko mourning for j anbazhagan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->