பரபரப்பான சூழலில் ஸ்டாலினை சந்தித்த அரசியல் தலைவர்.!
vaiko meets stalin
திமுக கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 21 மற்றும் 30 ஆம் தேதி தான் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கின்றது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்று அறிவித்த பின்னர் கமலஹாசனும் மக்கள் நீதி மையம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து இருக்கின்றது.
உள்ளாட்சித் தேர்தல் திமுக,அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் உள்ளிட்டவை தயாராகி வருகின்ற நிலையில் திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து கலைஞர் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையானது நடைபெற்ற முடிந்தது.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இருக்கட்சி தலைவர்களும் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.