திமுகவின் தொண்டர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்திய மதிமுகவின் குண்டர்கள்.!!
vaiko election campaign
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், மக்களவை தேர்தலோடு 19 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலை சந்திக்கவுள்ளது.
தேர்தல் வாக்கு பதிவு நாள் நெருங்கிவிட்ட நிலையில், அந்தந்த கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க தீவிர பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கும்பகோணத்தில், மதிமுக தலைவர் வைகோ கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், திமுக தொண்டர்களை வைகோவின் பாதுகாப்பிற்காக வந்த குண்டர்கள் அடித்து துவைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மயிலாடுதுறை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, பழைய மீன் மார்க்கெட் அருகில், திமுக கூட்டணி கட்சி சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றிய போது, அமர்ந்து இருந்த திமுக தொண்டர்கள் மேடை அருகே குவிய தொடங்கினர், அப்போது, வைகோவின் பாதுகாப்பிற்காக வந்த குண்டர்கள், மேடைக்கு அருகில் இருந்தவர்களை கண்மூடி தனமாக தாக்கி தள்ளி விட்டனர். பதிலுக்கு தி.மு.கவினரும் தக்க அந்த இடமே கலவர பூமியாக மாறியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.