தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது.? வெளியான தகவல்.!
urban local body election may be for feb 12 and 13
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, சமீபத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆனால் இதுவரை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. அதற்கான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தேர்தல் ஆணையம் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
urban local body election may be for feb 12 and 13