மிகப்பெரிய வெற்றியை குவித்த பாஜக.! பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி.!
up local election victory pm wish
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மண்டல பஞ்சாயத்து தேர்தலில், மொத்தமுள்ள 825 இடங்களுக்கு 635 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
பாஜக மற்றும் பாஜக கூட்டணி அரசின் இந்த வெற்றி குறித்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டியில், "74 மாவட்டங்களில் நடந்த மண்டல பஞ்சாயத்து தேர்தலில் 635 இடங்களை பாஜகவும் அப்னா தளம் கட்சியும் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது." என்று மகிழ்ச்சியுடன் அதை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடந்த ஜில்லா பஞ்சாயத் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 75 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 67 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். "உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசின் மக்களுக்கான கொள்கைகள் திட்டங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடுதான். இந்த பெருமை அவரையே சேரும்."என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து தெரிவிக்கையில், "மாநிலத்தில் ஆளும் பாஜக தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. வேட்பாளர்கள் பலரும் கடத்தப்பட்டனர். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பலரின் வீட்டில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டனர். ஜனநாயகத்தை பாஜக பிணைக்கைதியாக வைத்துள்ளது" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
English Summary
up local election victory pm wish