முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை.!!
up ex cm kalyan singh admitted to hospital
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் நேற்று மாலை லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்யாண் சிங்கிற்கு கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, லக்னோவில் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கல்யாண் சிங்கை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்நிலையில், கல்யாண் சிங் தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சீராக உள்ளது. இருப்பினும் அவர் முழு நினைவோடு இல்லை. எனவே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
English Summary
up ex cm kalyan singh admitted to hospital