உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா தொற்று உறுதி.!
up cm affected corona
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றன. மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதே சமயத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அவர் கொரோனவுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தன்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.