புதுக்கோட்டையில் வாக்குப்பெட்டியை திருடிய மர்ம நபர்கள்! வாக்குப்பெட்டியை தேடி கண்டுபிடித்த போலீசார்!
Unknown persons theft Vote box from booth
இன்று தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஆனது முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடைபெற்ற தேர்தல் சில இடங்களில் சலசலப்பை உண்டாக்கியது.
இன்று நடைபெற்ற பரபரப்பான சம்பவங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது, அந்த மாவட்டத்தில் பெரியமுள்ளிப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குபெட்டியை, வாக்குச்சாவடியின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இதனையடுத்து வாக்குபெட்டியை தேடும் வேலையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வாக்குபெட்டியை மீட்டுள்ளனர். வாக்குப் பெட்டி சீல் உடைக்கப்படாத நிலையில் போலீசார் கைப்பற்றியதால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வாக்குப்பெட்டி திருடப்பட்டது குறித்து இரண்டு நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குச்சாவடியில் வாக்குப்பெட்டியை திருடிய சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
English Summary
Unknown persons theft Vote box from booth