விருதுநகரில் பட்டப்பகலில் கொடூரம்.. அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்.!
Unknown gang cuts AIADMK figure with a scythe
அதிமுக பிரமுகரை பட்டப்பகலில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் அதிமுக விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவராக பதவி வகித்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சத்தியமூர்த்தி திருச்சுழி மாரியம்மன் கோவில் பின்புறம் நடந்து சென்றபோது, திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை ஆயுதங்களுடன் சூழ்ந்தது. மேலும் அவர் தப்பி ஓட முயன்ற போது மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
மேலும், அவரை சாலையோரத்தில் தூக்கி வீசியதால் யாருக்கும் அவர் தெரியவில்லை. சுமார் அரை மணி நேரம் முதல் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த அவரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் திருச்சியில் நகர்ப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Unknown gang cuts AIADMK figure with a scythe