டெல்லி விவசாயிகள் போராட்டம்.! ஐநா மனித உரிமைக் கவுன்சில் பரபரப்பு கருத்து.!
un say about farmers protest
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லி எல்லை பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து 73 நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிரானவை என்ற கருத்து வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. விவசாயிகள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, 'தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வைத்து விடும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ரத்தாகும்" என்று விவசாயிகள் தெரிவிக்கின்றன.
புதிய மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி, வேளாண் அமைச்சர் பல்வேறு விளக்கங்களையும், 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை விடாமல் தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்து, தேசிய கோடி அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விவசாய சங்கங்கள் தங்களின் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளன.
விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்திற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பில் இது எங்கள் ஒரு நாட்டு பிரச்சனை. நீங்கள் தலையிட கூடாது என்று இந்திய பிரபலங்களும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐநா மனித உரிமைக் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தில் அதிகபட்ச கட்டுப்பாட்டை இந்திய அரசும், விவசாயிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசும், விவசாயிகளும் அமைதியை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் மனித உரிமைகள் வழங்கும் வகையில் தீர்வுகளை கண்டறிவது மிக முக்கியமாகும்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஐநா மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
English Summary
un say about farmers protest