#Breaking | திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம்! உடைக்கப்பட்ட சேர், எறிபட்ட தீர்மானம்!  - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம், உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் அதிமுகவினர் - திமுகவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அதிமுக பேரூராட்சி உறுப்பினர் ஒருவர் நாற்காலிகளை அடித்து நொறுக்கி, தீர்மான புத்தகத்தை தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உதயேந்திரம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டமானது நடைபெற்றது. அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், பேரூராட்சியில் சில முறைகேடுகள் நடைபெற்றுவதாக கோரி கூறி, வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இரண்டாவது வார்டு அதிமுக உறுப்பினர் பரிமளா என்பவரின் கணவர், கூட்டத்தில் வெளியில் நின்றவாறு பேரூராட்சியின் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தெரிவித்தார்.

அப்போது திமுகவை சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர், வெளியில் இருப்பவர்கள் கேள்வி கேட்க கூடாது. கேள்வி கேட்க வேண்டும் என்றால் கூட்டம் தொடங்கும் முன்பே தலைவரிடம் அனுமதி பெற்று, பின்னர் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனால் ஒரு கட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அதிமுக உறுப்பினர், அங்கிருந்து சேர்களை அடித்து நொறுக்கினார். அப்போது அதிமுக எம்எல்ஏ சமாதானம் பேசி, பேரூராட்சி கூட்டத்தை முடித்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UDHAYENDRAM ADMK DMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->