உதயநிதி சொன்ன பெருசு ரஜினி இல்லையாம், அவங்க அப்பாவை தானாம்.!
udhayanithi got nose cut
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல இடங்களிலும் வன்முறை, போராட்டங்கள் வெடித்து வருகின்றது. இதுகுறித்து ரஜினிகாந்த், "வன்முறை எதற்கும் தீர்வாகாது. கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. நாட்டு மக்கள் நலனும், தேச பாதுகாப்பும் மிகவும் முக்கியம்." என்பது போல கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அவரது இந்த பதிவை கேலி செய்யும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "வரும் 23ஆம் தேதி சென்னையில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம், வயதான வசதியான பெரியவர்களை வீட்டிலேயே பாதுகாப்போடு விட்டு வருவோம்." என்று கூறியிருந்தார். இதன் காரணமாக திமுகவினருக்கும் ரஜினி ரசிகர்களுக்கும், மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் வசதியான, வயதானவர்களை வீட்டிலேயே விட்டு வரவும் என்று உதயநிதி கூறியது ரஜினியை தான் என்று திமுகவினர் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்டாலின்தான் வயதானவர். எடப்பாடி இடம் தோற்றுப்போய் தற்பொழுது ஆரோக்கியம் இல்லாமல் இருக்கின்றார். ஸ்டாலினின் மனைவியோ கோவில், கோவிலாக சென்று வழிபட்டு வருகிறார். எனவே உதயநிதி கூறியது ரஜினியை அல்ல, ஸ்டாலினை தான்." என்று தெரிவித்து இருக்கின்றார்.