ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்க்கு இடையில் அடிமைப்போட்டி - உதயநிதி விமர்சனம்.!
Udhayanithi about Ops and EPs issue
பாஜகவின் உத்தரவிற்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் காத்துக் கிடப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பற்றி கருத்து தெரிவித்த உதயநிதி, "அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்-சும் கமலாலயத்தில் பாஜகவின் உத்தரவுக்காக காத்துக் கிடக்கின்றனர்.
ஆட்சியில் இருந்த வரைக்கும் இவர்கள் இருவருக்கும் இடையில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருந்து வந்தது. இப்போது ஆட்சி காலி ஆகிவிட்டது. எனவே, இவர்கள் இருவருக்குள் நீயா நானா என்ற போட்டி நிலவுகின்றது.
இந்த போட்டியானது பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய அடிமை யார் என்பதுதான். இந்த அடிமை போட்டியால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வருகிறது." என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Udhayanithi about Ops and EPs issue