விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின்! அறிவாலயத்தில் விருப்ப மனு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்னும் திமுக அதிமுக உள்ளிட்ட போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. 

இன்று திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வரும் நிலையில் இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியை பொருத்தவரையில் தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் புதுச்சேரியில் காலியாக இருக்கின்ற காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

திமுக போட்டியிடும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வின் சார்பாக கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கவுதம சிகாமணி விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். திமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருக்கும் பொன்முடியின் மகன்தான் கவுதம சிகாமணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்பது திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது தான் தெரியவரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanidhi stalin in vikravandi for dmk candidate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->