உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப் போகும் தொகுதி.. களத்தில் இறங்கிய ஐ-பேக்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா.? மாட்டாரா.? என்ற கேள்வி எழுந்தது. 

தற்போது உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் திருவாரூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால், மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து விட்டார். எனவே உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் தொகுதிகளில் போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. 

தற்போது உதயநிதி ஸ்டாலின் சென்னையில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதி மூன்று முறை வெற்றி பெற்ற சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது.  அந்த தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அந்த தொகுதியில் அதிக நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட நேரிடும் என்பதால் வேறு தொகுதியை தேர்வு செய்ய திமுக மேலிடம் முடிவு செய்துள்ளது. 

அதற்காக தொகுதி தேர்வு செய்யும் பணியை திமுக மேலிடம், ஐ-பேக் டீமும் தொடங்கியிருப்பதாக திமுகவினரும் கூறுகின்றனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தவிர்க்கும் பட்சத்தில், ஸ்டாலின் 4 முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanidhi stalin constituency in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->