அப்பாவிற்கே டப் கொடுக்கும் உதயநிதி.. அசத்தலாக அடுத்தடுத்த சம்பவங்கள்.!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்த கலைஞர் ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று, கடந்த 2018 ஆம் வருடத்தில் உடல்நலக்குறைவால் இயற்கையை எய்தினார். கலைஞரின் நினைவு நாளில் தி.மு.கவினர் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பல நலத்திட்ட பணிகளையும் செய்து வந்தனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றதும், திரைத்துறை மூலமாக அறிமுகம் ஏற்படுத்தப்பட்ட உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் அறிமுகம் செய்து, இளைஞரணியில் பதவியும் வழங்கப்பட்டது. உதயநிதியும் பல தி.மு.க கூட்டங்களில் கலந்துகொண்டு, உடன் பிறப்புகளிடையே உரையாற்றினார்.

உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், " முத்தமிழறிஞரின் நினைவுநாளில், தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சிபெற்ற 254 பெண்களுக்கு தையல் எந்திரங்கள், சான்றிதழ், அரிசி-மளிகை பொருட்களை மா.செயலாளர் பி.கே.சேகர் பாபு அவர்களின் ஏற்பாட்டில் வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் அண்ணன் தயாநிதிமாறன் எம்.பி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முத்தமிழறிஞரின் நினைவு தினத்தில் சென்னை கிழக்கு மா.செயலாளர் அண்ணன் பி.கே.சேகர் பாபு அவர்களின் ஏற்பாட்டில், ஊரடங்கால் பாதிக்கப்படும் துறைமுகம் தொகுதி மக்களுக்கு ஒரு மாதம்வரை தினமும் 3 வேளை உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தேன். அண்ணன் தயாநிதிமாறன் எம்.பி உள்பட பலர் கலந்துகொண்டனர் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Helps poor family


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->