அதிமுகவினர் செய்த சம்பவம்., கோவைக்கு புறப்படும் உதயநிதி!
udhay protest announce
கோவையில் அதிமுகவினர் ஒட்டிய சுவரொட்டியால் திமுக தலைமை முதல் தொண்டர்கள் வரை கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர். அதிமுகவினர் ஒட்டிய சுவரொட்டியை திமுக இளைஞர் அணியினர் கிழித்து ஏரியாவே, அவர்களை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து உள்ளனர்.
இதனை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், "கழகத்தை அவதூறு செய்யும் நோக்கில் அடிமைகள் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த கோவை இளைஞரணியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடி காலை பிடிப்பவர் எடப்பாடி. அவரின் காலை தொழுபவர் வேலுமணி. அவர் சொல்வதை கேட்டு கரைவேட்டி கட்டாத அதிமுகவாக செயல்படும் கோவை காவல்துறையை கண்டிக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கைது சம்பவத்தை கண்டித்து நாளை காலை 9.30 மணிக்கு குனியமுத்தூர் போலீஸ் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்த தி.மு.க. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோவை புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.