திருச்சியில் நடந்த சம்பவம்.! ஆட்சியில் திமுக., விடாமல் அடிக்கும் டிடிவி தினகரன்.!
ttv warn to mgr statue damage
திருச்சி மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
"திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரு உருவ சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மா உணவகத்தை சேதப்படுத்துவது, புரட்சித்தலைவரின் சிலையை உடைப்பது என தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்தடுத்து நிகழும் அராஜகங்கள், அக்கட்சியை "தீயசக்தி" என எங்கள் தலைவர்கள் அடையாளம் காட்டியதற்குச் சாட்சியாக அமைந்திருக்கின்றன.
இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv warn to mgr statue damage