இரட்டை இலை போனது போச்சு.! குக்கர் நமக்கே.!! தினகரன் நம்பிக்கை.!!
ttv talk about cooker
உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தொடர்ந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ''இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுக்காவிட்டால் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இல்லை வழக்கின் இறுதி விசாரணை நிறைவு பெற்று, ஓபிஎஸ் இபிஎஸ் க்கு இரட்டை இலையை வழங்கியது சரி தான் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தினகரன், சசிகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்,
இன்று இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துது. மேலும், இரட்டை இலை வழக்கு தொடர்பாகவும்,குக்கர் சின்னம் தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 25ம் தேதிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தெரிவிக்கையில், ''எங்கள் பக்கம் நியாயம் உள்ளது. விரைவில் குக்கர் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படும், வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க உள்ளோம்.
இன்று உச்சநீதிமன்றத்தில் சின்னம் வழக்கை 25-ம் தேதி ஒத்தி வைத்துள்ளார்கள் நிச்சயம் எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்க உள்ளது'' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.