இன்று சசிகலா கூறிய கருத்து., டிடிவி தினகரன் அளித்த விளக்கம்.!
TTV SAY ABOUT SASIKALA Statement
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, சசிகலா தங்கியிருக்கும் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "பொது மக்களின் வேண்டுதலால் நலன் பெற்றேன் அதற்கு நன்றி.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். இது நடக்குமென நம்புகிறேன். தொண்டர்களுக்கு நான் என்றும் உண்மையாக துணையாக இருப்பேன். விரைவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திப்பேன்" என சசிகலா தெரிவித்தார்.
இதுகுறித்து, சசிகலாவின் கருத்து குறித்து அவர் தன தெளிவுப்படுத்த வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவித்ததாவது, "ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். என்று சசிகலா சொல்வது, ஜெயலிதாவின் தொண்டர்கள் என்று சொல்கிறாரா., இல்லை அதிமுகவின் தொண்டர்களையா., இல்லை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களையா என்பது எனக்கு தெரியாது.
சசிகலாவின் நிலைப்பாடு குறித்து அவர் தான் கூற வேண்டும். அனைத்து விவகாரங்கள் குறித்தும் நானே பேச முடியாது. அவர்கள் நிலைப்பாட்டை அவர்கள்தான் தெரிவிக்கவேண்டும், அறிவிக்க வேண்டும்" என்று டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார் .
English Summary
TTV SAY ABOUT SASIKALA Statement