தீய சக்தி திமுக., அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம்.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு... நம் இயக்கத்தின் ஆற்றல்மிக்க செயல்வீரராகவும், முன்னணி தளகர்த்தராகவும் திகழ்ந்த என் அருமை நண்பர் வெற்றிவேல் மண்ணில் விதைக்கப்பட்டு ஓராண்டு ஓடிவிட்டது. 

தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும், தலைமைக்காகவும் எத்தகைய இன்னல்களையும் தாங்கி களத்தில் நின்ற நம்முடைய வெற்றியின் இன்முகம் என்றென்றும் நம் நெஞ்சங்களைவிட்டு மறையாது. எந்த சக்தியாலும் விலைகொடுத்து வாங்கமுடியாத விசுவாசத்தின் இலக்கணமாக தன்னுடைய இயக்கப் பணிகளை அமைத்துக்கொண்டவர் வெற்றிவேல். 

அதன் வெளிப்பாடாகவே இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது அளப்பரிய அன்பும், பற்றும் கொண்டிருந்தார். அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அம்மாவின் உருவமாக நம்மோடு இருக்கும் தியாகத்தலைவி சின்னம்மா மீதும், என் மீதும் அப்பழுக்கில்லாத அன்பைக் காட்டினார். 

துரோகத்தின் தீ நாக்குகளும், அதிகாரத்தின் அத்துமீறல்களும் நம்மை சுழன்று அடித்தபோதும் ஒரு துளியும் சஞ்சலமில்லாமல், நான் தர்மத்தின் பக்கம்தான் நிற்பேன்; என்று உறுதியோடு போராட்டக்களத்தில் நின்றவர் வெற்றிவேல். சூதுமதியாளர்கள் சிலரால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்ட பிறகும் அதே உறுதியோடு, சொல்லப்போனால், முன்பைவிட இன்னும் வேகமாக இயக்கப் பணிகளை ஆற்றியவர் வெற்றி.

அஞ்சாமை திராவிடர் உடைமை; என்பதற்கு ஓர் அடையாளச் சின்னமான வெற்றிவேல் போன்ற அப்பழுக்கில்லாத தொண்டர்கள்தான், இந்த இயக்கத்தை உருவாக்கி இன்றளவும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளும், துரோகிகளும் ஏற்படுத்துகிற தடைகளையும், தருகிற இன்னல்களையும் உடைத்து நொறுக்கி இலக்கு நோக்கிய நமது பயணத்தைத் தொடர்வதற்கான சக்தியையும் இவர்கள்தான் நமக்குத் தருகிறார்கள்.

அதனாலேயே, சில களங்களில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும் அதனைக் கண்டு துவண்டுவிடாமல், எந்த நோக்கத்திற்காக இந்த லட்சியப் போராட்டத்தைத் தொடங்கினோமோ அந்த உணர்வு கொஞ்சமும் மாறாமல் நடைபோடுகிறோம். சட்டமன்றத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தாண்டி அண்மையில் நடந்து முடிந்த ஊரக, உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறோம். 

பல இடங்களில் வெற்றிக்குப்பக்கத்தில் வந்திருக்கிறோம். ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக அடலேறுகளைப்போல களத்தில் நிற்கும் லட்சோப லட்சம் வெற்றிவேல்கள்தான் இதற்கு காரணம். எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிக வெற்றிகளைக் குவித்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகள் நாம்தான் என்பதை தமிழக மக்களின் பேராதரவோடு நிரூபிப்பதே வெற்றிவேல் போன்ற வீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். 

நம்முடைய கொள்கைத் தலைவர்களான புரட்சித்தலைவராலும், புரட்சித்தலைவியாலும் தமிழ்நாட்டின் தீயசக்தியாக அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க, காலம் செய்த கோலத்தால் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட்டாலும் அவர்களால் தமிழ்நாட்டின் உரிமைகளையோ, தமிழக மக்களின் நலன்களையோ முழுமையாக காப்பாற்றிட முடியாது என்பதையே கடந்தகால வரலாறு நமக்கு எடுத்து சொல்கிறது. நதிநீர் பிரச்னைகளில் தொடங்கி தமிழகம் அனுபவித்த, அனுபவிக்கிற பல தீமைகளுக்கு தி.மு.க. எனும் சுயநலக் கூட்டமே காரணம். 

எனவே, அந்த தீய சக்தியை எதிர்ப்பதில் எந்த சமரசமும் இன்றி களத்தில் நிற்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இன்னொரு பக்கம், அண்ணாவின் இயக்கத்தை சுயநலத்தால் அபகரித்த தீயசக்தி கூட்டத்திடமிருந்து அண்ணாவின் உண்மைத் தொண்டர்களையும் தமிழ்நாட்டின் நலன்களையும் காத்திட புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கத்தின் பொன்விழா ஆண்டு இது. 

அதனை இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாற்றிக் காட்டினார்கள். அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு அதன் பெருமை குலையாமல் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் கட்டி காப்பாற்றினார்கள். ஆனால் அந்த இயக்கம், எடுப்பார் கைப்பிள்ளையாகி, பெருமை இழந்து, இன்றைக்கு நிலை தடுமாறி நிற்கிற சூழலை விரைவில் மாற்றிக்காட்டுவதற்கும் புரட்சித்தலைவர் இயக்கத்தின் பொன்விழா ஆண்டு தொடக்கத்தில் உறுதியேற்போம். 

நம்முடைய இயக்கத்தையும், தமிழ்நாட்டையும் புரட்சித்தலைவி அம்மா காலத்து சிறப்புகளோடு மீட்டெடுத்திடுவோம் என்று எதற்கும் அஞ்சாத லட்சோப லட்சம் வெற்றிவேல்கள் நிறைந்திருக்கிற இந்த இயக்கத்தின் சார்பில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோம். நம்மோடு இப்போது களத்தில் நிற்கிற வெற்றிவேல் போன்ற எத்தனையோ பேரின் உழைப்பும், தியாகமும் நம்முடைய கரங்களில் வெற்றியைத் தரப்போகும் நாள் வெகு அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு லட்சியப்பயணத்தைத் தொடர்ந்திடுவோம்!" என்று அந்த அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv say about admk and dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->