அ.ம.மு.க கட்சியினரை எப்படி அதிமுகவிற்கு இழுக்கிறார்கள்.. பகீர் காரணத்தை வெளியிட்ட தினகரன்!! - Seithipunal
Seithipunal


நேற்று அ.ம.மு.க சார்பில் திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அ.ம.முக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே  ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-

தமிழகத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்க்கு முழு கரணம் இந்த அரசே. இந்த நிலைமை ஏற்பட தமிழக அரசு எந்த வித முன்னெச்சரிக்கை எடுக்காததே குடிநீர் தட்டுப்பாட்க்கு காரணம். 

எங்களை லெட்டர் பேடு கட்சி என அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். தனது சொந்த தொகுதியிலேயே டெபாசிட் கூட வாங்க முடியாத அமைச்சர் ஜெயக்குமார்க்கு எங்களை பற்றி பேச துளியும் தகுதியும் இல்லை. மேலும் எங்கள் கட்சியினரை பதவி ஆசை காட்டி அ.தி.மு.க.விற்க்கு இழுக்கிறார்கள். அங்கு சென்றவர்கள் மீண்டும் அ.ம.மு.கவுக்கே திரும்புவார்கள்.

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியான பிறகு தினகரன் இவ்வாறு கூறியது அ.ம.மு.க சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் எங்களுடன் ஒத்த கருத்துடைய கட்சியினருடன் கூட்டணி அமைத்தோ, அல்லது தணித்தோ போட்டியிடுவோம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran speak about aiadmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->