அதிமுக அரசின் ஊழல்கள்.. தேதி குறித்த டிடிவி தினகரன்.. மிரண்டுபோன அதிமுகவினர்.!!
ttv dinakaran says admk govt
நேற்று மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, தஞ்சை பெரிய கோவில் இருமொழிகளிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இல்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக அரசு முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் எனக் கூறினார்.
மேலும் தமிழக அரசின் ஊழல்கள் வருகிற 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதங்களுக்கு பிறகு வெளிவரும், கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும். அதேபோல தமிழக அரசு ஊழியர்கள் வருகிற 21ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும் என கூறினார்.
English Summary
ttv dinakaran says admk govt