உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் டிடிவி. தினகரன் வெளியிட்ட தகவல்.! உற்சாகத்தில் தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி தேர்தல் குறித்து டிடிவி. தினகரன், தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆளும்கட்சியினரின் லீலைகளால் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்களோடு நடந்து முடிந்திருக்கிறது. 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆளும்கட்சியினர் வாக்குச் சாவடிகளில் நடந்துகொண்ட விதமும் அவர்கள் நிகழ்த்திக்காட்டிய வன்முறை வெறியாட்டங்களும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக அமைந்திருக்கிறது. 

வாக்குப்பதிவு நாளன்றுகூட பணத்தை தண்ணீராகச் செலவழித்து, வாக்காளர்களை வளைக்க ஆளும்கட்சி முயற்சித்ததைப் பார்த்தால், எந்தளவுக்கு அவர்கள் மக்களையும் ஜனநாயகத்தையும் ஒரு விலைபொருளாகப் பார்க்கிறார்கள் என்ற வேதனையான உண்மை புரிகிறது.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் தேர்தல் களத்தில் தேனீக்களாய் சுழன்று களப்பணி ஆற்றியதற்காக எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran report for ammk members


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->