எங்கள் நோக்கம் இதுதான்! இதற்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டுள்ளோம்! டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி!
ttv dinakaran press meet in admk leaf
அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் இன்று செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை,
தீயசக்தியான தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்தது போல், துரோக சக்தியான அ.தி.மு.க.விடம் இருந்து நாங்கள் விலகி வந்து விட்டோம். அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை. முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அனைத்து தரப்பு அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலை, 8 வழிச்சாலை போன்ற மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அவர்கள் கொண்டு வரவில்லை. தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் வேடிக்கையாக பேசியுள்ளார். தற்போதுள்ள மத்திய அரசு வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தொழில் துறையை வளர்ப்பதாக கூறி விவசாயத்தை அழிக்க முயற்சி செய்கின்றனர்.
நாங்கள் அதிமுக என்றும் துரோக கும்பலை விட்டு ரொம்ப தூரம் தள்ளி வந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
English Summary
ttv dinakaran press meet in admk leaf