சசிகலா எப்போது சிறையில் இருந்து வருவார்? தினகரன் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


இன்று அமமுக கட்சியின் புதிய தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் திறக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்துவைத்தார். கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் வெற்றிவேல், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

இதனைத்தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியவை, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இந்த கூட்டணி மிகவும் வலுவாக அமைந்தது தேர்தலில் மிகப் பெரும் மிகப்பெரிய வெற்றியாக அமையும். அமமுகவிற்கு விரைவில் தேர்தல் ஆணையம் சின்னத்தை வழங்கும். 

மேலும் சிறையிலிருக்கும் சசிகலா குறித்து பேசினார். சசிகலாவை வெளியே எடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் வெளியே வந்ததும் அமமுகவில் இணைவார் என கூறினார். அதையடுத்து ரஜினி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட கருத்து, அதில் நான் தலையிட முடியாது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran press meet about sasikala release


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->