தினகரனுக்கு போன் செய்த ரஜினி.. மாறும் அரசியல்.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருந்த சசிகலா, நேற்று காலை கார் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பெங்களூரிலிருந்து இருந்து சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடம், ஜானகி அம்மாள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதன் பிறகு சைதாப்பேட்டை பகுதியில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், சைதாப்பேட்டை பகுதி கழக செயலாளர் கோட்டூர்புரம் கந்தன் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர். தி.நகர் வீட்டிற்கு வந்ததும் ஜெயலலிதா படத்திற்கு  சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், சின்ன அம்மாவுக்கு கூடிய தொண்டர்கள், மக்கள் கூட்டம் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மக்கள் மனதிலிருந்து வெளிப்படுகிறது. சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளது. 

கர்நாடகாவிலும் தமிழகத்திலும் தன்னெழுச்சியாக வரவேற்பு அளித்த தொண்டர்களுக்கு நன்றி. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்தார் எனக் கூறினார்.  மேலும், அதிமுக பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிகலாவுக்குத்தான் அதிகாரம் உள்ளது என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran press meet about sasikala and rajini


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->