சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா..? டிடிவி தினகரன் வெளியிட்ட தகவல்.! மகிழ்ச்சியில் அமமுகவினர்.!!
ttv dinakaran press meet about sasikala
அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, பெரியார் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பது வருத்தமளிக்கிறது. பெரியார் தனி மனிதன் அல்ல. அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம்.
பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதற்கு பேசியது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெறவில்லை. கம்பெனிதான் நடைபெற்று வருகிறது. இதை மக்கள் ஆட்சியாகவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெண்கள் மீதான தாக்குதலும், பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்குநாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது எனக் கூறினார்.
மேலும் சசிகலா குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவது ஏற்புடையது அல்ல. அவர் சிறையிலிருந்து வெளியே வருவதற்கான சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
English Summary
ttv dinakaran press meet about sasikala