நானும் அதற்கு விலக்கு அல்ல.! தடுமாறிய தினகரன்.!! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. 

இந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அணைத்து அரசியல் காட்சிகள், சாதி சங்க அமைப்புகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி. அமமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், நேற்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் மாற்றிக் கூறியது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அமமுகவின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பழனியில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டிடிவி தினகரன், தனது கட்சி வேட்பாளர் ஜோதிமுருகனின் பெயரை வேல்முருகன் என்று மாற்றி தெரிவிக்கவே, கூடியிருந்த தொண்டர்கள் சிரித்ததுடன், குழப்பமடைந்தனர். 

பிரச்சாரத்தின் போது பெரும்பாலான தலைவர்கள் வேட்பாளரின் பெயரை மாற்றி கூறிவரும் வேளையில், அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்று நேற்று தினகரனும் நிரூபித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DINAKARAN CONFUSED CANDIDATE NAME


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->