சசிகலா., திமுக., கூட்டணி., நிலைப்பாடு..! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.! நாளை வெளியாகப்போகும் அறிவிப்பு.!
TTV DHINAKARAN stand
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று, டிடிவி தினகரன் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது, "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடி வருகின்றனர்.
நாளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் எங்களின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய உள்ளோம். நாங்கள் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அதுகுறித்து தற்போது தெரிவிக்க முடியாது. பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் அறிவிப்போம். வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் தான் கூட்டணி அமையும்.
தமிழகத்தில் ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைப்பட்டது என்றால்.,. அது திமுகவின் ஆட்சி தான். எங்களின் பொது எதிரி திமுக. எங்களின் ஒரே இலக்கு எங்களின் பொது எதிரியான திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான். இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகிவிடும். அதன் பின்னர் இந்த ஆட்சி இருக்காது. தேர்தல் ஆணையத்தின் ஆட்சிதான் நடக்கும்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். என்று சசிகலா சொல்வது, ஜெயலிதாவின் தொண்டர்கள் என்று சொல்கிறாரா., இல்லை அதிமுகவின் தொண்டர்களையா., இல்லை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களையா என்பது எனக்கு தெரியாது.
சசிகலாவின் நிலைப்பாடு குறித்து அவர் தான் கூற வேண்டும். அனைத்து விவகாரங்கள் குறித்தும் நானே பேச முடியாது. அவர்கள் நிலைப்பாட்டை அவர்கள்தான் தெரிவிக்கவேண்டும், அறிவிக்க வேண்டும்" என்று டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார் .