உடனே களமிறங்குங்கள்., உடன்பிறப்புகளுக்கு கட்டளையிட்ட டிடிவி தினகரன்.!
ttv dhinakaran say about tn heavy rain
தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிவிப்பில், "கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்!
தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து உதவி வருகிறீர்கள்.
தற்போது பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" எண்ட்ட்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dhinakaran say about tn heavy rain