#திருச்சி : அதிமுக நிர்வாகிகள் மீது பணமோசடி வழக்கு! - Seithipunal
Seithipunal


திருச்சி : திருச்சி மாநகர 54-வது வார்டு அ.தி.மு.க. துணை செயலாளராக இருப்பவர் சுப்பிரமணியன். இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் கட்சித் தலைமை அவருக்கு பதிலாக கதிரேசன் என்பவரை அறிவித்தது. இதனால், அ.தி.மு.க. செயலாளர் நாகநாதர் பாண்டி இடம் முறையிட்டுள்ளார்.

அதற்க்கு சுப்பிரமணியனிடம் பாண்டி, 'நீங்கள் ரூ. 5 லட்சம் கொடுத்தால், கதிரேசன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார்' என உறுதி அளித்தார். 

ஆனால் கதிரேசன் வேட்பு மனுவை வாபஸ் பெறாமல் ஏமாற்றியதுடன், சுப்பிரமணியன் கொடுத்த ரூ.1 லட்சம் பணத்தையும் ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுக செயலாளர் நாகநாதர் பாண்டி மற்றும் வார்டு செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy ADMK money laundering case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->