கடந்த வாரம் இ.பி.எஸ் டெல்லி சென்ற நிலையில் நாளை ஓ.பி.எஸ் டெல்லி செல்கிறார்!! வெளியானது பயணத்தின் பின்னணி !!
tomorrow ops going to delhi
பாராளுமன்றம் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நாட்டின் 2வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் மோடி தலைமைலான அரசு பொறுப்பேற்று முதல் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது அதில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்தார் அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதின் கட்கரியை சந்தித்து பேசியிருந்த நிலையில்
இதனையடுத்து, நாளை மாலை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார். டெல்லி பயணத்தின் போது மற்ற முக்கிய மத்திய அமைச்சர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
English Summary
tomorrow ops going to delhi