"ஈவேரா எனும் சாக்கடை"., 'மோடியாவது ம...வது'., அடப்பாவிகளா! நடந்தது என்ன?!
today worst behavior in tn people
இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு உலக நட்டு தலைவர்கள், உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி பல்வேறு ஹேஸ்டேக் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஏழைத்தாயின் மகனாக, ஒரு டீ விற்பனை செய்தவராக, ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டனிலிருந்து இன்று இந்திய நாட்டின் பாரத பிரதமராக உயர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
அதே சமயத்தில் இன்று தமிழகத்தில் பெரியார் என்று அழைக்கப்படும் ஈ வே ராமசாமியின் 142வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமூக நீதி உள்ளிட்ட பல போராட்டங்களை முன்னெடுத்தவர். கடவுள் எதிர்ப்பை பிரதானமாக முன்வைத்து ஈ வே ராமசாமி போராட்டம் செய்து செய்து வந்தார்.
இந்நிலையில், தமிழர்கள் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு மோசமான ஹேஸ்டேக்கலை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாத குறையாக டிரென்ட் செய்து, தமிழர்களின் மனதை கப்பல் ஏற்றியுள்ளனர். ஒரு பக்கம் 'மோடியாவது ம...வது' என்ற ஹேஸ்டேக்கும். இன்னொரு பக்கம் "ஈவேரா எனும் சாக்கடை" ஹஸ்டெக்கும் ட்ரண்ட் செய்யப்பட்டதை பார்த்து பலரும் முகம் சுளித்தனர்.
தமிழனுக்கு என்று ஒரு பெருமை உள்ளது. அதை இப்படி இணையத்தில் ட்ரண்ட் செய்து அசிக்கப்படுத்து நபர்கள் திருந்த வேண்டும் என்ற குரல், அதே சமூக வலைத்தளங்களில் ஓங்கி ஒலிக்கிறது.
English Summary
today worst behavior in tn people