புல் புல் புயலால் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு.!
today weather report
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில், மேற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடும் என்றும், மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது வலுப்பெற்று புயலாக மாறி இருக்கின்றது.
புல் புல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கரை நோக்கி நகரக் கூடும்.
இன்று முதல் 10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.