விஜயகாந்த் தலைமையிலான கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!
today dmdk meeting
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கழக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபேற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
உள்ளாட்சித் தேர்தல், சாலைகள் சீரமைப்பு, டெங்கு தடுப்புப் பணிகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என தேமுதிக அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம். மேலும், திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர், அவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். எனவும் தேமுதிக வலியுறுத்தியுள்ளது.