மொத்தம் 28 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


கடந்த ஏழு மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 22 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதேபோல் தூத்துக்குடி, நெல்லை  மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேரை திருநெல்வேலி மாநகர போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கடந்த 7 மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், தூத்துக்குடி, நெல்லையை சேர்ந்த 6 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் நெல்லை மாநகர போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன், முத்துக்குமரன், ராஜசேகரன், விக்ரம் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் ராஜ், அழகர் ஆகிய 6 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இதனை அடுத்து இந்த ஆறு பேர்களையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn police arrest in 28 rowdys


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->