#சற்றுமுன் || தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை.!
TN GOVT ORDER 2022 JAN 17
9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தும், சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசனை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அரசாணையில் படி,
* சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர்(பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
English Summary
TN GOVT ORDER 2022 JAN 17