தமிழகம் முழுவது 2,000 மினி கிளினிக்.! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!
tn govt mini clinic
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசியதாவது,
"தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உள்ளது. தற்போது வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக 7,525 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது." என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.