விவசாயிகளுக்காக புதிய மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி.!
tn cm says agriculture zone
சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7 மாவட்டங்களை பாதுகாக்கப்ட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்ட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதா மசோதவை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார்.
English Summary
tn cm says agriculture zone