விழுப்புரம் சரவணன் உயிரிழப்பு., தமிழக முதல்வர் வெளியிட்ட உத்தரவு.! - Seithipunal
Seithipunal


செஞ்சியில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சரவணன் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கெங்காவரம் கிராமத்தை சேர்ந்த சரவணன், மின் கம்பம் சரிந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சரவணன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிதியில் இருந்தும், 6 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்தும், மொத்தமாக பத்து லட்சம் ரூபாய் வழங்க நிவாரணம் வழங்கப்படும்" என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm mourning to vizhupuram saravanan death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->