ஞானதேசிகன் மறைவுக்கு., தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


உடல்நல குறைவுய் காரணமாக பி.எஸ். ஞானதேசிகன் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு ஏராளமான கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஞானதேசிகன் உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞானதேசிகன் மறைவையொட்டி 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஞானதேசிகன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இரங்கல் செய்தியில், "தமிழ் மாநில காங்கிரஸின் துணை தலைவர்  திரு. ஞானதேசிகன் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் துயர செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். 

அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்வதோடு குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், சிறந்த பண்பாளருமான திரு.ஞானதேசிகன்  அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

திரு.ஞானதேசிகன் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm mourning to Gnanadesikan Death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->