திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவிற்கு தமிழக முதல்வர் இரங்கல்..!
tn cm mourning for dmk mla
திமுக கட்சியின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கடந்த இரண்டாம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை பல்லாவரம் ரேலா மருத்துவமனையில் அனுமதியானார். இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியான நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தீவிர சிகிச்சை அளித்து வந்தது. சுமார் இரண்டு நாட்கள் 80 விழுக்காடு வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் மேற்கொண்டு வந்த நிலையில், பின்னர் உடல்நிலை சீரானது.
இதன்பின்னர் மீண்டும் ஜெ.அன்பழகனின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தது. மேலும், முந்தைய நிலையை விட ஆக்சிஜனின் தேவை அதிகரித்ததாகவும், ஜெ.அன்பழகனின் இதயம் மற்றும் கிட்னி செயல்பாடுகள் குறைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திமுக வட்டாரத்திடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அன்பழகனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
English Summary
tn cm mourning for dmk mla